Saturday, April 4, 2015

சர்வதேச தொழிலாளர் உரிமைகள் மாநாட்டில் சிறப்புரையாற்ற புறப்படுகின்றார் றக்கீப்.

மருதமுனைனைச்சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிஉயர் பீட உறுப்பினரும் சர்வசதே தொழிலாளர் உரினமகள் மையத்தின் ஆலோசகருமாகிய சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள் எதிர்வரும் 7ம் ஆம் திகதி கட்டார் நாட்டில் சர்வதேச தொளிலாளர் உரிமைகள் மையத்தினால் அன்நாட்டின் வெளிநாட்டு தொளிலாளர்களின் உரிமைகள் சம்மந்தமாக நடைபெறவிருக்கும் தொளிலாளர் உரிமைகள் மாநாட்டில் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவதற்காக விசேட அழைப்பின் பேரில் எதிர்வரும் 6ம் ஆம் திகதி திங்கட்கிழமை கட்டார் நாட்டிற்கு பயணமாகின்றார்

மேலும் இவர் கட்டார் நாட்டில் தொளில் புரியும் இலங்கையர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சம்மந்தமாக இலங்கை தொளிலாளர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விசேட நிகழ்வில் கலந்து கொண்டு இலங்கை தொளிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான சட்ட ஆலோசனைகனளயும் அதற்கான தீர்வுகளையும் வழங்கவுள்ளார்.

கட்டார் நாட்டில் சட்ட ஆலோசனை வேண்டி நிற்கும் நம்மவர்கள் மேற்குறித்த சந்திப்புக்கள் இடம்பெறும் இடத்திற்கு சென்று தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com