Sunday, April 12, 2015

'சிறுபான்மை மக்களுக்காக குரல் தந்த ஒரே மஹாநாயக்கர்'

காலஞ்சென்ற அஸ்கிரிய பீடாதிபதி வண. அக்கமஹா பண்டித உடுகம சிறி புத்தரகித்த மஹாநாயக்கர் சிறுபான்மை சமூகங்களுக்காக குரல் கொடுத்த ஒருவர் என்று பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் கூறியுள்ளார். காலஞ்சென்ற மஹாநாயக்கரின் இறுதி நிகழ்வுகள் இன்று அரச மரியாதையுடன் கண்டி அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் நடந்தன. அதற்காக தேசிய துக்கதினமும்இலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் தலைவர் குறித்து கருத்து தெரிவித்த, பேராதனை பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் தகைமைசார் பேராசிரியரான சி. பத்மநாதன் அவர்கள், ''ஜனநாயகம் பற்றியும் சிறுபான்மை மக்களின் நலன்கள் குறித்தும்'' அவர் வலியுறுத்தியிருந்ததாகவும் குறிப்பிட்டார்

- சித்தன் -

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com