Monday, December 29, 2014

அரசுக்கெதிராக பூகம்பம் வெடிக்க யார் காரணம். சஜின் வாஸ் vs கிறிஸ் நோணிஸ் Xரே ரிப்போட்

மகிந்த அரசுக்கெதிராக இவ்வளவு பாரிய எதிர்ப்பலைகள் எழும்புவதற்கு பல காரணிகள் கூறப்படுகின்றது. அதில் மிக மிக முக்கியமாக இந்திய. அமெரிக்க கூட்டுச்சதி பற்றித்தான் ஆய்வாளர்கள் பேசுகின்றார்கள்.

ஆனால் இவைகளை விட. மிக மிக முக்கியமாக முன்னாள் சிறிலங்கா அரசின் இங்கிலாந்து தூதுவர் திரு.கிறிஸ் நோணிஸ்ஸை பற்றி யாருமே. எதுவுமே கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவரது காய்நகர்த்தல்கள்தான் இங்கு பாரிய அளவில் சிறிலங்கா அரசை ஆட்டிப்படைக்கின்றது.

யாரின்த கிறிஸ் நோணிஸ். சிறிலங்காவில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காறர்களில் ஒருவர். சிறிலங்காவின் மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதியாளர். படித்தவர். பண்பாளர். இவையெல்லாம் ஒருவருக்கு இருந்தால் நிச்சயம் அவர் தலைக்கனம் பிடித்தவராக இருப்பார்.

அவ்வகையில் கொஞ்சம் கிறுக்கறும் கூட. ஆனால் புத்திசாலி. டபுள் டொக்டரேட். பிரிட்டிஷ் குடியுரிமையும். பிரிட்டிஷ் அரச குடுபத்தவர்களை சந்தித்து பேசக்கூடிய தகுதியும் உள்ளவர். பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்சுடன் இவருக்கு கூட்டுவியாபாரங்களும் உண்டு.

இங்கிலாந்துக்கான சிறிலங்காவின் தூதுவராக இருந்த ஜஸ்ரிஸ் நிஹால் ஜெயசிங்ஹவின் இடத்துக்கு கிறிஸ் நோணிஸ் நியமிக்கப்பட்டார். அங்கிருந்த உதவி தூதுவர் ஒருவரை அவ்விடத்துக்கு நியமிக்க இருந்த போது.

அவர் முஸ்லீம் என்பதால். அவரை தூக்கி தூர வீசிவிட்டு. அந்த இடத்துக்கு பண முதலையான கிறிஸ் நோணிஸை நமது ஜனாதிபதி அதிவிஷேட உத்தரவு மூலம் நியமித்தார்.

அங்கிருந்துதான் சனியன் தனது ஆட்டத்தை தொடங்கியது. சிறிலங்காவில் இருந்து அரசியல்வாதிகள். அரசின் உறவினர்கள். அடியாட்கள். பந்தாக்கள். வால்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இங்கிருந்து வாய் மொழி அல்லது அரச உத்தரவுகள் அந்தந்த நாட்டு தூதுவர்களுக்கு பறக்கும்.

அந்த உத்தரவுகளை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு. அவ்வவ் நாட்டிலுள்ள துதுவர்கள். இங்கிருந்து செல்பவர்களை தலையில் தூக்கி வைத்து. கூத்தாடி. அவர்களை தலாட்டி. அரசிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள்.

அரச வேலையாக செல்பவர்களுக்கு இப்படி ஒரு சம்பிரதாயம் இருப்பது நியதிதான். ஆனால் அரச கூஜாக்களுக்கும் இப்படித்தான் வளங்கப்பட வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத நியதி இருந்தது.

ஆனால் இந்த பாச்சா கிறிஸ் நோணிஸிடம் பலிக்கவில்லை. இங்கிருந்து போனவர்களுக்கெல்லாம் அளவோடுதான் எல்லாமே நடந்தது. கிறிஸ் நோணிஸின் இந்த நடவடிக்கை மகிந்த பெமிலியையும் கலவரப்படுத்தியது.

அவரை ரிசைன் பண்ணு என்று சொல்லமுடியாத நிலை ஏற்பட்டது. எப்படி இவரை துரத்துவது என மகிந்த பெமிலி திட்டம் தீட்டியது.


அதன் ஒரு பிரதிபலிப்புதான் ஐ.நா.வில் வைத்து சஜின் வாசுடன் சொல்லி அவரை பிரித்து மேய்ந்தது. இது அழகாக திட்டமிடப்பட்டு. மகிந்த ராஜபக்சவின் பூரண ஆசியுடனேயே நடைபெற்றது.


உலகின் முகடு என்று சொல்லப்படுகின்ற. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தின் போது. மொத்த உலகமே பார்த்திருக்க. ஒரு நாட்டின் தூதுவருக்கு. அதே நாட்டின் மந்திரி ஒருவர் தாறு மாறாக அடித்தது என்பது ஒரு சரித்திரம். கிறிஸ் நோணிஸின் குரல் சிறிலங்காவில் எங்குமே எடுபடவில்லை. ஆனால் அது உலக அரங்கில் நன்கு உணரப்பட்டது.

வடக்கு லண்டனில் குடியிருந்த கிறிஸ்நோணிஸுக்கு தெற்கு லண்டனில் குடியிருந்த சந்திக்கா அம்மையாரை சந்தித்து. தனது ஆதங்கத்தை கொட்ட அவ்வளவுநேரம் எடுக்கவில்லை. காய்கள் வெகு நேர்த்தியாகவும். நாசூக்காகவும் நகர்த்தப்பட்டன.

ஏற்கனவே சிறிலங்காவுக்கு தேன்நிலவுக்கு மற்றும் உல்லாச பிரயாணிகளாகச் சென்ற பலர் அரச கட்சியினரால் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது. நட்சத்திர விடுதிகளில் தாக்கப்பட்டது.

இவை சம்பந்தமாக செய்யப்பட்ட புகார்கள். அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரானது. போன்ற கடுப்பில் இருந்த. இங்கிலாந்து அரசுக்கு கிறிஸ்நோணிஸின் எதிர்ப்பும் ஒரு வரப்பிரசாதமானது.

கிறிஸ்நோணிஸின் பின்னணி. ஒரு அரச கட்சி உறுப்பினரால் சிறிலங்காவின் தெற்கில். உல்லாசவிடுதியில் கொலைசெய்யப்பட்ட இங்கிலாந்து பிரஜையின் உறவினர்களின் பணபலம்.

இங்கிலாந்து அரசின் வழிகாட்டல். சந்திரிக்கா அம்மையாரின் உள்ளக்கிடக்கை என அனைத்தும் ஒன்றாக. தெற்கு லண்டனில் உள்ள ஹொலிடே இன் ஹோட்டலில் ஒரு மாலைப்பொழுதில் கைகுலுக்கி்க் கொண்டன.

அதற்கு முன்னரே இந்தியா மற்றும் அமெரிக்காவின் நெறிப்படுத்தலில் இருந்த அம்மையாருக்கு கிறிஸ்நோணிஸ் மற்றும் இங்கிலாந்து அரசின் வழிகாட்டல் ஒரு தெம்பை கொடுத்தது.

இங்கு மிகமிக அருமையாக அம்மையார் அமெரிக்கா மற்றும் இந்தியாவை முன்னிலைப்படுத்தாமல் ஜேர்மன். இத்தாலி அரசுகளை இவர்களுக்கு கருவியாக பாவித்துக்கொண்டார். குறிப்பாக மகிந்த அரசின் மாவட்ட அமைப்பாளர்களை இந்த தூதுவராலயங்களுக்கூடாக கைக்குள் போட்டுக்கொண்டார்.

அந்த அரச அமைப்பாளர்களை கொண்டே அனைத்து காய்களும் நகர்த்தப்பட்டன.அதிக கல்வி அறிவில்லாத இந்த மாவட்ட அமைப்பாளர்கள் சிங்கப்பூர். பெங்கொக். மலேசியா செல்கின்றோம் எனக் கூறிக்கொண்டு கடந்த ஆறுமாதங்களாக இத்தாலிக்கும். ஜேர்மனிக்கும் பறந்து சந்திகரிக்கா. அமெரிக்கா. இந்தியா. இங்கிலாந்து வேலைத்திட்டங்களுக்கு துணைபோனார்கள். இன்னும் போகின்றார்கள்.

மகிந்த அரசுக்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை. தமிழ்நாட்டில் ஜெயலலிதா அம்மையார் இரவோடிரவாக மந்திரிகளை சுத்திகரிப்பதுபோல். திருவாளர் மகிந்த செயற்படுவாரானால் ஜனவரி 10 அவருக்கு புதுப்பொலிவாக இருக்கும்.


( ஸ்கொட்லாண்டிலிருந்து காத்தான்குடி கச்சிமுகம்மது ).

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com