Wednesday, December 24, 2014

பகிரங்க விவாதத்திற்கு வேட்பாளர்களான மஹிந்தவும் மைத்திரியும் வரவேண்டும் : சட்டத்தரணிகள் சங்கம்

ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளான மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரை ஜன­வரி 2 ஆம் திக­திக்கும் 5ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட தின­மொன்றில் பகி­ரங்க விவா­தத்தில் பங்­கேற்­கு­மாறு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் அழைப்பு விடுத்­துள்­ளது.

சட்­டத்தின் ஆட்சிஇ சுதந்­தி­ர­மான நீதித்­துறை, நல்­லாட்சிஇ சட்டம் ஒழுங்கை உறு­திப்­ப­டுத்தல், ஊழல் ஒழிப்பு ஆகிய ஐந்து பிர­தான விடயங்­களின் கீழ் 33 வினாக்­கொத்­தொன்றும் நேற்று முன்­தினம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள அழைப்­பி­தல்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டுள்­ள­தாக அச்­சங்கம் தெரி­வித்­துள்­ளது.

இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அச்­சங்­கத்தின் தலைவர் உபுல் ஜய­சூ­ரிய மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இவ்­ஊடக­வி­ய­லாளர் சந்­திப்பில் சங்­கத்தின் பிரதித் தலைவர் பிர­சன்ன ஜய­ரத்னஇ செய­லாளர் அஜித்­பத்­தி­ரண ஆகியோர் உட்­பட முக்­கிய உறுப்­பி­னர்கள் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இங்கு சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் உபுல் ஜய­சூ­ரிய தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­னதும் ஜன­நா­ய­க­மான­து­மான தேர்­த­லொன்று நடை­பெ­ற­வேண்டும் என்­பதில் எமது சங்கம் ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்து அதற்­கு­ரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

கடந்த சனிக்­கி­ழமை எமது சங்­கத்தின் கூட்டம் இடம்­பெற்ற போது ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டையில் விவா­த­மொன்றை நடத்­த­வேண்டும் என்ற கோரிக்­கை­யொன்று முன்­வைக்­கப்­பட்டு ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அத­ன­டிப்­ப­டையில் நாம் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான வேட்­பா­ளர்­க­ளான மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும்இ மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோருக்கு பகி­ரங்­க­மான விவா­த­மொன்றில் பங்­கேற்கு­மாறு அழைப்பு விடுத்­துள்ளோம்.

அத்­துடன் அவர்கள் இவ்­வ­ழைப்­பி­தலை ஏற்­றுக்­கொண்டு அவ்­வி­வா­தத்தில் பங்­கேற்­பார்கள் என்ற எதிர்­பார்ப்பு எமக்­குள்­ளது. மேலும் சர்­வ­தேச நாடு­களில் இவ்­வா­றான விவா­தங்கள் இடம்­பெ­று­கின்ற போதும் இலங்கை வர­லாற்றில் இடம்­பெறும் முத­லா­வது சந்­தர்ப்­ப­மாக அமையும்.

இந்த விவா­தத்­தினை நெறிப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக கட்­சி­பே­த­மற்றஇ அர­சியல் சார்­பற்ற மூன்று புத்­தி­ஜீ­விகள் இருப்­பார்கள் என்­ப­துடன்இ குறித்த விவாதம் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் கேட்போர் கூடத்தில் நடத்­து­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­டத்தின் ஆட்சிஇ சுதந்­தி­ர­மான நீதித்­துறைஇ நல்­லாட்சிஇ சட்டம் ஒழுங்கை உறு­திப்­ப­டுத்தல்இ ஊழல் ஒழிப்பு ஆகிய ஐந்து பிர­தான விடயங்­களின் கீழ் 33 வினாக்­கொத்­தொன்று அவர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான பதில்­களை வேட்­பா­ளர்கள் இரு­வரும் எமது சங்­கத்­திற்கு வழங்­கு­வார்கள் என எதிர்­பார்க்­கின்றோம். அப்­ப­தில்கள் அனைத்தும் மக்கள் மயப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

அத்­துடன் ஒவ்­வொரு வேட்­பா­ள­ருக்கும் ஐம்­பது அழைப்­பி­தழ்கள் வழங்கத் தீர்­மா­னித்துள்­ள­துடன் இலத்­தி­ர­னியல் ஊடகங்கள் இந்த விவா­தத்தை நேர­டி­யாக ஒளிப­ரப்புச் செய்­வ­தற்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வுள்­ள­தோடு ஏனைய ஊட­கங்களும் பதிவு செய்துகொள்ளமுடியும்.

இவ்வாறான விவாதங்கள் எந்த வொரு அரசியல் நோக்கத்தினை கருத்திற்கொண் டும் நாம் மேற்கொள்ளவில்லை. மாறாக வேட்பாளர்கள் தொடர்பான தெளி
வான நிலைப்பாட்டை மக்கள் எடுப் பதற்கு உதவியாக இருக்கும் என்ற அடிப் படையிலேயே இச்செயற்பாட்டை முன் னெடுக்கின்றோம். அதேநேரம் நாட்டின் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதாக இருக்கும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com