Friday, December 26, 2014

வவுனியாவில் 20 குளங்கள் உடைப்பு! – 12 ஆயிரம் பேர் பாதிப்பு. மழையின் கோரத்தாண்டவம்

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்காக 21 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – கடந்த சில நாள்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக மூவாயிரத்து 74 குடும்பங்களைச் சேர்ந்தபன்னிரண்டாயிரத்து 243 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்காக 21 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – கடந்த சில நாள்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக மூவாயிரத்து 74 குடும்பங்களைச் சேர்ந்த பன்னிரண்டாயிரத்து 243 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இவர்களில் 763 குடும்பங்களைச் சோந்த இரண்டாயிரத்து 892 பேர் 21 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பகுதியில் 14 நலன்புரி நிலையமும் வவுனியா பிரதேச செயலக பிரிவில் 6 நலன்புரி நிலையமும் வவுனியா வடக்கில் ஒரு நலன்புரி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இதுவரை 20 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. அவற்றில் ஓமந்தை, நறுவெளிக்குளம், செட்டிகுளம், கந்தக்குளம் என்பன நேற்று உடைப்பெடுத்துள்ளதனால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்த அனர்த்தங்கள் காரணமாக 21 வீடுகள் முழுமையாகவும் 207 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை மல்வத்து ஓயா நீர் பெருக்கெடுத்தமையால் மீடியாபாம் கிராமம் நீரில் முழ்கியுள்ளது. இங்கு வசித்து வந்த மக்களின் வீடுகள் முழுமையாக நீரில் அகப்பட்டுக் கொண்டமையால் கொட்டும் மழைக்கு மத்தியில் காட்டுப் பகுதியில் தறப்பால் கொட்டகைக்குள் இவர்கள் அவலநிலையில் வசித்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com