Sunday, October 5, 2014

சந்திரிக்கா- ரணில் பிரித்தானியாவில் பேச்சு வார்த்தை. பிரதமருக்கு பச்சை – ஜனாதிபதிக்கு சிவப்பு சமிக்கைகள்.

எதிர்வரும் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வரவுள்ளது. இவ்வறிவித்தலுக்கு முன்னராக பிரித்தானிய சென்றுள்ள எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார் என தெரியவருகின்றது.

அந்த வரிசையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவையும் இரு தடவைகள் சந்தித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்தனக்கு ஆதரவு தருமாறு வேண்டியுள்ளார் ரணில் விக்கிரமசிங்கா.

ரணிலுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தர மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்கக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றி பெற்ற பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கும் பொறிமுறை தொடர்பில் விளக்கியுள்ளதுடன் அவ்வாறு ஒழிக்கப்பட்டு பாராளுமன்றுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் உருவாகவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராவதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் தேர்தலில் எதிர்கட்சிகளுக்குள்ள சவால்கள் தொடர்பிலும் எதிர்கட்சிகளின் ஐக்கியத்தின் அவசியம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com