Friday, September 19, 2014

குடு லாலிதவின் 685 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அரசுடமை!

அத்துருகிரிய, ஒருவல பகுதியில் வைத்து கடந்த 5ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 'குடு லாலித' என்றழைக்கப்படும் விதான முதியன்சலாகே லாலித்ய கௌசல்யவின் 685 இலட்சம் ரூபாய் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

போமிரிய, கொரதொட்ட மற்றும் தலங்கம பிரதேசங்களிலுள்ள அதி சொகுசுவாய்ந்த வீடுகள், ரணாலையில் உள்ள காணி, 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார், 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு வாகனங்கள் என்பன இந்த சொத்துக்களில் அடங்குகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com