Monday, August 18, 2014

ஹட்டன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட புராதன வாள் காண்டி இராச்சியத்திற்குரியதாம்...!

100 வருட பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் புரதான வாள் ஒன்றினை விற்பனை செய்ய முயன்ற 3 சந்தேகநபர்கள் சென்ற 07 ஆம் திகதி இரவு ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 08 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்களை நாளை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மேற்படி வாளை பற்றி விசாரணைகளை ஆராய்ந்து ஹட்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் தொள்பொருள்துறை திணைக்களத்திற்கு ஹட்டன் நீதிமன்றத்தின் நீதவான் அமில ஆரியசேன உத்திரவிட்டிருந்தார்.

அந்தவகையில் தொள்பொருள்துறை திணைக்களம் குறித்த வாளை பற்றி ஆராய்ச்சி செய்து இந்த வாள் பல வருடத்திற்கு பழைமை வாய்ந்தது எனவும் அது கண்டி இராச்சியத்திற்குரியது எனவும் அறிவித்துள்ளது.

சென்ற 16 ஆம் திகதி இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து 18 ஆம் திகதி வரை இந்த வாள் கண்டி இராச்சியத்திற்குரியது என ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளது.

மஸ்கெலியா பிரதேசத்தில் குறிப்பிட்ட வீடொன்றில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த வாள், (வெள்ளி மற்றும் பித்தளையாலும் கலந்து செய்யப்பட்ட வாள்) சுமார் 36 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்படுகையில் குறித்த சந்தேக நபர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com