Monday, August 11, 2014

பண்டாரநாயக்கா, ராஜபக்ஷ குடும்பத்திற்கு உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உரிமை தென்னகோன் குடும்பத்திற்கும் உண்டு!

தற்போதைய அரசாங்கத்தைப் போன்று இந்நாட்டின் அபிவிருத்திக்காக செயற்பட்ட எந்தவொரு அரசாங்கத்தையும் வரலாற்றில் ஒருபோதும் காணவியலாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்ரிபால சிரிசேன குறிப்பிடுகிறார்.

தம்புல்லவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் பண்டாரநாயக்கா குடும்பத்திற்கும், ராஜபக்ஷ குடும்பத்திற்கும் உள்ள உரிமைகளும், பொறுப்புக்களும் தம்புல்ல தென்னகோன் குடும்பத்திற்கும் இருப்பதை தான் தெளிவாக வலியுறுத்துவதாக்க் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com