கணிதம் சித்தியடையவில்லையா? கவலை வேண்டாம் உயர்தரம் படிக்கலாம்! ஆனால் பல்கலை நுழைவு இல்லை!!
க.பொ.த. (சா.த) பரீட்சையில் கணிதம் சித்தியடையாத மாணவர்கள் பாடசாலைக் கல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிலையை மாற்றுவதற்காக அவர்கள் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்பதற்காக சுற்று நிரூபமொன்றை கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன முன்வைத்துள்ளார்.
கணித பாட சித்தியின்மை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைக் கல்விக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளதாகவும், அவர்கள் விளையாட்டு, கலை, நடனம் ஆகிய துறைகளில் ஆற்றல்மிக்கவர்கள் எனவும், கணித பாட சித்தியின்மையால் அவர்களது வெளித் திறமைகள் அழிந்து போய் அவர்களது எதிர்காலம் இருள்மயமானதாக மாறுவதாகவும் அமைச்சர் தெளிவுறுத்துகின்றார்.
உயர் தரம் கற்கும் காலத்தில் கணித பாடத்தில் சித்திபெற்றுக் கொடுக்க முடியும் என்ற உறுதியின் பேரில் உயர்தரம் கற்க முடியும் எனவும், அவ்வாறு குறித்த காலப் பகுதியில் கணிதம் சித்தியடையாது விட்டாலும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் இந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பல்கலைக் கழக நுழைவு வேண்டின் கட்டாயம் அவர்கள் கணித பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment