Sunday, July 6, 2014

ஈ.சி.ஜி. பரிசோதனைக்கு தயாராகும் பெண்களை நிர்வாணப் படம் பிடித்தவர் கைது!

ஈ.சி.ஜி. பரிசோதனைக்கு தயாராகும் பெண்களை தனது செல்லிடத் தொலைபேசியால் இரகசியமான முறையில் நிர்வாணப் படம்பிடித்த பெண் ஒருவரை கைது செய்து ள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் மூன்றாம் வார்டின் அறையொன்றில் ஈ.சி.ஜி. பரிசோதனைக்கு செல்வதற்காக தயாராகும் பெண்கள் தமது ஆடைகளை களையயும் போது சந்தேக நபரான குறித்த பெண் தனது செல்லிடத் தொலை பேசியால் படம்பிடித்துள்ளார்.

இதனை கண்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வைத்தியசாலை பொலிஸார் குறித்த பெண்ணை பரிசோதித்த போது அவரின் செல்லிடத் தொலைபேசியில் சில பெண்கள் மேலாடையின்றி இருக்கும் படங்கள் இருந்துள்ளன. இதனை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் தான் படம் பிடித்ததை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஆனால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை எனவு ம் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு தலாதூவ கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com