Monday, July 7, 2014

எஸ்.எஸ்.பி.மஜீத் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகும் கடிதத்தை இன்று அனுப்புகின்றார்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகத் தீர்மானித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி மஜீத் இன்று (07) தனது இராஜினாமாக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கவுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

இந்த இராஜினாமாக் கடிதத்தில் கட்சியின் அங்கத்துவத்திலிருந்தும், ஏனைய பதவிகளிலிருந்தும் தான் விலகிக் கொள்வதற்கான காரணங்களை குறிப்பிட்டு அனுப்பிவைக்கவுள்ளதாகவும், மக்களின் விருப்பத்திற்கமைவாக தனது எதிர்கால நடவடிக்கையைப் பற்றி சிந்திக்கவுள்ளதாகவும் எஸ்.எஸ்.பி. அப்துல் மஜீத் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com