Thursday, July 31, 2014

புத்த சாசன அமைச்சை மூடுவதற்கு ஒரு மாத காலக்கெடு! - ராவண பலய

புத்த சாசன அமைச்சை ஒரு மாத காலத்திற்குள் புனர் நிர்மாணம் செய்யாதவிட்டால் உடனடியாக அதனை மூடிவிடுமாறு ராவண பலய அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று (31) புத்த சாசன அமைச்சுக்கு தேரர்கள் பலருடன் சென்றவேளையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டுக்கும் இனத்திற்கும் மதத்திற்கும் எதிரான சவால்களை முறியடிப்பதற்கும், குரல் கொடுப்பதற்கும் செயற்படுவதற்கும் தேர்ர்களுக்கும் பாரம்சாட்டிவிட்டு, புத்த சாசன அமைப்பு தூங்கிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்கவியலாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தேரர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் அசிரத்தையாக இருந்தால் புத்த சாசனத்தையும், பௌத்தர்களையும் பாதுகாக்க முடியாது எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com