Thursday, July 3, 2014

தனது ஊடகச் செயலாளரிடம் ரூபா 500 மில்லியன் நட்டஈடு கோருகிறார் பொன்சேக்கா!

ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேக்கா, முன்னாள் ஊடகச் செயலாளர் சஞ்ஜீவ சமரசிங்கவிடம் தன்னை மானபங்கப்படுத்தியதற்காக ரூபா 500 மில்லியன் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஆசியன் மிரர் ஊடகத்திற்குத் தெரிவித்திருக்கின்றார்.

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது முன்னாள் ஊடகச் செயலாளர், சரத் பொன்சேக்காவை ஒரு “கொடுங்கோலன்” என்றும், ஜனநாயக வழிமுறையிலிருந்து விலகிச் செல்லக் கூடிய ஒரு “சர்வாதிகாரி” எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதுதொடர்பில் ஆசியன் மிரர் ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த மானவடு, ஜனநாயக்க் கட்சியின் தலைவருக்கும், கட்சிக்கும் தீங்கு விளைவிக்க்க் கூடிய முறையில் கருத்துத் தெரிவித்துள்ளதாகவும், அவருக்கு எதிராக வழக்காடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சஞ்ஜீவ சமரசிங்கவின் நடத்தையில் மாற்றம் நிகழ்வதாலும், கட்சிக்கு எதிராகச் செயற்படுவதாலும் அவரை அக்கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஆவன செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com