Tuesday, June 3, 2014

சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வங்கி முகாமையாளர் கைது!!

கந்தளாய் பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் மகா வித்தியாலயத்தின் பயிலும் 12 வயதான மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இந்த வங்கி முகாமையாளர் கைது செய்யப் பட்டுள்ளார். கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் ப்படுத்தப்பட்ட இந்த சந்தேக நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தந்தையின் வங்கி கணக்கு தொடர்பாக வங்கியில் விபரங்களை கேட்க சென்றிருந்த போது, முகாமையாளர் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படு த்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com