Saturday, June 21, 2014

ஒரு கோடி ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் இந்தியர் ஒருவர் கைது!

இலங்கையிலிருந்து சென்னைக்குச் செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்திருந்த இந்திய வியாபாரி ஒருவரின் இரண்டு பயணப் பொதிகளிலிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான வல்லப்பட்டை 13 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இந்திய வியாபார இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கைக்கு வந்துபோயுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள வல்லப்பட்டை அரச உடைமையாக்கியுள்ள அதிகாரிகள், குறித்த பயணிக்கு ரூபா 5 இலட்சம் தண்டப் பணம் செலுத்துமாறும் ஆணையிட்டுள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com