Friday, June 27, 2014

மாத்தறை தெயட்ட கிருலு செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன!

2015 தேசத்திற்கு மகுடம் மாத்தறை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புகுல்வெல்ல பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென புகுல்வெல்ல பிரதேச சபையின் தலைவர் சனத் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

கம்புறுப்பிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், பிரதியமைச்சருமான ஹேமால் குணசேக்கர இதற்காக ரூபா 20 கோடியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலிருந்து பெற்றுக் கொடுத்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 9 கோடி ரூபா, நகர் அபிவிருத்தி 7 கோடி, ருகுணு அபிவிருத்தி 20 இலட்சம், பிற திட்டங்களுக்காக 4 கோடி ரூபா என ஒதுக்கீடு செய்துள்ளது.

கிரிந்த நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பஸ் தரிப்பு நிலையம், வாராந்த சந்தை, பிரதான வீதியை விரிவாக்கம் செய்து அபிவிருத்தி செய்தல், கிரிந்த மருத்துவ நிலையத்தை புனர்நிர்மாணம் செய்தல் பிரேரிக்கப்பட்ட முக்கிய செயற்றிட்டங்களாகும்.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும, தென் மாகாணக் கல்வியமைச்சர் சந்திமா ராஸபுத்ர ஆகியோரும் செயற்றிட்டங்கள் பலவற்றுக்கு பண உதவி செய்வதாக வாக்களித்துள்ளனர் எனவும் பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com