Monday, June 9, 2014

எல்.ரி.ரி.ஈ யின் வெடி பொருட்கள் பிரிவின் தலைவர் தப்பியோட்டம்! பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர் பொலிஸார்!

எல்.ரி.ரி.ஈ யினரின் வெடி பொருட்கள் பிரிவின் தலைவராக செயற்பட்ட குணசேகர முதியன்சலாகே திலங்க ஜூட் என்டனி அல்லது இளங்கோ என்பவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.

கடந்த 4ம் திகதி மடு பொலிஸாரினால் இரண்டு பேரை சோதனையிட முயன்ற போது ஒருவர் தப்பிச் சென்று ள்ளார். கைது செய்யப்பட்ட மற்றைய நபரிடமிருந்து ரி.என். ரி. வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்

கைது செய்யப்பட்டு தப்பிச் சென்ற நபர் மடு பகுதி மற்றும் கனகராயன் குளம் ஆகிய பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகளை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்றும் இந்த நடவடிக்கை களுக்கு தலைமை தாங்கினார் என்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

தலைமறைவாகியுள்ள நபர் தான் புதைத்து வைத்துள்ள வெடிபொருட்களை மீனவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் தெரியவந்துள்ளது. வெடி பொருட்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் நன்கு அறிந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முதியன்சலாகவே திலங்க ஜூட் என்டனி அல்லது இளங்கோ என்ற நபர் முருங்கன் ஜீவநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் 861634132 எ என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்டவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் தொடர்பாக விபரங்கள் தெரிந்திருப்பின் 0112 451636 அல்லது 0112 451634 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com