Sunday, June 15, 2014

ஜ.நா குழுவை நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை! அரசாங்கம் உறுதி!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளை மேற் கொள்வதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு வினரின் பரந்துபட்ட விசாரணைகளுக்கு எந்தவொரு வகை யிலும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனும் முடிவில் அரசாங்கம் மிகவும் உறுதியாக உள்ளது.

அத்துடன் இக்குழுவினரை நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை எனும் முடிவிலும் அரசாங்கம் உறுதியாக உள்ளது. விசாரணைக்குழுவினை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என்பது தொடர்பில் அதியுயர் சட்டவாக்கல் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தினால் எடுக்கப்படும் தீர்மானத்தை மீறி எவராலும் எதனையும் பலவந்தமாக செயற்படுத்த முடியாதென்பதிலும் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.

இலங்கை மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டிருக்கும் ஒருதலைப்பட்சமான பிரேரணையை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக நிராகரித்துள்ள நிலையிலும், குழுவொன்றின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோருவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. விநாயகர் ஆலயத்தில் தேங்காய் அடித்து வழிபட்டதுடன் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும் தனது வழிபாட்டை நடத்தியுள்ளார். சங்கம் வீதி பெயர் மாற்ற விவகாரத்தில் தான் இறைவனுக்கும். ஜனாதிபதிக்குமே நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com