Sunday, June 15, 2014

கொழும்பு, காத்தான்குடி தலிபான் அடைக்கலப் பிரதேசமாக… - இண்டர்போல்!

இலங்கை தலிபான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பிரதான நாடாகும் என சர்வதேச பொலிஸ் என்று அழைக்கப்படுகின்ற இண்டர்போல் இலங்கை புலனாய்வுப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தலிபான் பயங்கரவாதிகள் இலங்கைக்கு வந்து, பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையிலிருந்து செல்வதற்கு இலகுவாகவே இவ்வாறு செயற்படுவதாகவும், மேலும், இலங்கையர்களுடன் வியாபார நடவடிக்கைகளிலும், சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும், கொழும்பு மற்றும் காத்தான்குடிப் பகுதிகளில் இந்தப் பயங்கரவாதிகள் வசித்து வருவதாகவும் புலனாய்வுப் பிரிவு சந்தேகம் தெரிவிக்கிறது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com