Tuesday, June 17, 2014

ஜூலை மாத ஆரம்பத்தில் ஊவா மாகாண சபை கலைக்கப்படும்!

அடுத்த மாதம் முதலாம் வாரத்திற்குள் பெரும்பாலும் ஊவா மாகாண சபை கலைக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.

ஊவா மாகாண சபையின் காலக்கெடு ஜூலை முதலாம் வாரத்தில் முடிவடையவுள்ளதால், அதற்கு முன்னர் யாப்பிற்கேற்ப செயற்படுமாறு பிரதான அமைச்சர் சசீன்த்ர ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பற்றியோ பொதுத் தேர்தல் பற்றியோ இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com