Monday, June 16, 2014

அரசியல்வாதிகள் ஓய்வுபெற்றால் யாரும் அவர்களைக் கணக்கெடுப்பதில்லை!

அரசியல்வாதிகள் ஓய்வுபெற்றுச் சென்றபின்னர் பொலிஸாரைப் போல அவர்களையும் மக்கள் கவனத்திற் கொள்வதில்லை என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம குறிப்பிடுகிறார்.

மத்துகம வாராந்தச் சந்தைக்கு அடிக்கல் நட்டும் விழாவின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஓய்வு பெறுவதற்கு முன்னர் நாட்டுக்குத் தேவையான உதவி ஒத்தாசைகளைச் செய்ய வேண்டும். நல்லவற்றைச் செய்யும்போது மக்கள் சந்தோசப்படுவார்கள். அதுபோல தாமும் சந்தோசித்து இறந்துபோக முடியும். எங்களுக்கு என்றும் அரசியலில் இணைந்திருக்க முடியாது. புதிய தலைமுறையினருக்கு நவீன தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கேற்ப புதியவற்றைச் செய்ய வேண்டும்” எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com