Thursday, June 19, 2014

கொத்தல்லனை பிரதேசத்தில் வல்லபட்டையுடன் ஐவர் கைது!

விற்பனைக்காக வல்லப்பட்டையை கொண்டு சென்ற 5 பேரை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (18) மாலை 4 மணியளவில் நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தல்லனை பிரதேசத்தில் இளைஞர்கள் 5 பேர் வல்லப்பட்டையை விற்பனைக்காக கொண்டு செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெவட்ட கெதர தலைமையிலான குழவினர் மேற்படி நபர்களை கைது செய்துள்ளனர்.

ரூபா 150000 பெறுமதியான வல்லப்பட்டடையுடன் கைதான சந்தேக நபர்கள் இன்று (19) ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com