Thursday, June 12, 2014

ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதுவராலய அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு…! - ஒருவர் பலி!

ரஷ்யாவின் தெற்குப் பிரதேசத்திலுள்ள Rostov-on-Don இல் அந்நாட்டு இலங்கை தூதுவராலய அதிகரிகாரிகளில் சிலருக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ள ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நிமித்தம் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த அதிகாரிகள் தங்கியிருந்த ஹோட்டல் பக்கமாக பயணப் பொதிகளுடன் வந்திருந்த டெக்ஸி வாகன சாரதிகள் இருவர் அதிகாரிகளிடம் அதிக பணம் கேட்டதைத் தொடர்ந்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அங்கு இலங்கை தூதுவராலயத்தில் கடமைபுரிந்து வந்த செயலாளரை காரினால் மோதிக் கொன்றுள்ளதுடன் பிரதிச் செயலாளரை சுட்டு விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்களை கைதுசெய்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் அறிவிக்கின்றன.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com