Tuesday, June 24, 2014

ஞானசார தேரர் புரிந்த தவறுதான் என்ன? வினாதொடுக்கிறது BBS

சிங்­கள பௌத்­தர்­களின் எழுச்­சியை தடுப்­ப­தற்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களும் அரச மற்றும் எதிர்த்­த­ரப்­பு­க்களில் உள்ள சில சக்­தி­களும் இணைந்து பொது­ப­ல­சேனா மீது பொய்­யான குற்­றச்­சாட்­டு­க்களை சுமத்­து­வ­தாக குற்றம் சாட்டும் அதன் நிர்­வாகச் செய­லாளர் டிலந்த விதா­னகே, வெளி­நா­டு­க­ளிடம் பணத்தை வாங்­கிக்­கொண்டு அர­சாங்­கத்தை கவிழ்க்கும் சதித்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக டிலந்த விதா­னகே மேலும் தெரி­விக்­கையில்,

அளுத்­க­மவில் பொசன் தினத்­தன்று பிக்கு ஒருவர் தாக்­கப்­பட்­ட­தற்கும் பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து கற்­களை வீசி­யது உட்­பட அனைத்­திற்கும் பொது ­ப­ல­ சேனா மீதே குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டு­கின்­றன. அப்­ப­டி­யென்றால் பெற்றோல் குண்­டுகள் எங்­கி­ருந்து அளுத்­க­ம­விற்கு வந்­தன? அதன் பின்­னணி என்ன? எல்­லா­வற்­றிற்கும் பொது ­ப­ல­ சே­னாவை குற்றம் சொல்­ப­வர்கள் இது பற்றி ஏன் தேடிப் பார்ப்­ப­தில்லை?

சிங்­கள பௌத்­தர்­களின் எழுச்­சியை தடுத்து, அர­சாங்­கத்தை நெருக்­க­டியில் தள்ளி, அரசை கவிழ்க்கும் சர்­வ­தேச சதித்­திட்­டத்தை, பணம் வாங்­கிக்­கொண்டு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களும் அர­சுக்­குள்ளும் எதிர்க்­கட்­சிக்­குள்ளும் இருக்கும் சில சதி­கா­ரர்கள் இவ்­வா­றான வன்­மு­றை­களைத் தூண்­டு­கின்­றனர்.

எமது ஞான­சார தேரரை கைதுசெய்­யு­மாறு கூறு­கின்­றனர். ஞான­சார தேரர் செய்த தவ­றென்ன? இதுவரையில் எந்­த­வி­த­மான முறைப்­பா­டு­களும் பொலிஸில் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.

முறைப்­பா­டுகள் இல்­லாது எப்­படி ஒரு­வரை கைதுசெய்­வது? எனவே, இதன் பயங்­க­ரத்தை அர­சாங்கம் கவ­னத்­திலே கொள்ள வேண்டும். இல்­லா­விட்டால் அர­சாங்கம் பாரிய நெருக்­க­டி­களை சந்­திக்க நேரிடும். எனவே, உண்­மை­யான குற்­ற­வா­ளி­களை கண்டுபிடிக்க அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள். அனைத்து குற்றக்கணக்குகளும் எமது கணக்கிலேயே வரவு வைக்கப்படும் நிலைமை உருவாகும் என்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com