Thursday, June 19, 2014

சற்றுமுன் பரகஹதெனிய பிரதேசத்தில் கார் ஒன்றில் 6 பேர் கைது. ஆயுதங்களும் மீட்பு (படங்கள் இணைப்பு)

இன்று மாலை பரகாதெனிய பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான விதத்தில்ஹோண்டா ரக கார் ஒன்றில் உலவிய பெரும்பான்மை இன வாலிபர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பரகாதெனிய ஜும்மா பள்ளிவாயளுக்கு முன்னால் உள்ள பிரதான பாதையில் திரும்பத்திரும்ப வேகமாக குறித்த கார் சென்றதால் சந்தேகத்தில் போலீசார் கரை நிறுத்தி பரிசோதித்ததில் குறித்த காரில் பெரும்பான்மை வாலிபர்கள் அறுவர் உற்பட சுமார் மூன்று அடி நீளவால்(படத்தில் உள்ளது) உற்பட ஆயுதங்களும் இருந்துள்ளது.

போலீசார் குறித்த வாலிபர்களை கைது செய்து மேலதிக விசாரணைகாக போலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது சகோதர ஊடகவியலாளர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட வண்டி அக்மீமன பகுதியில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிய வருவதுடன், தாங்கள் வாகனம் கொள்வனவு செய்ய வந்ததாகவும் போலிஸ் விசாரணையின் பொது தெரிவித்து உள்ளனர்.

அத்துடன் தற்போது போலிஸ் காவலில் உள்ள கைது செய்யபட்டவர்கள் நாளை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com