Monday, June 30, 2014

ஆளும் கட்சியிலிருந்து 30 இற்கும் மேற்பட்டோர் ஐதேகவில் இணையத் தீர்மானம்!

அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களில் 30 இற்கும் மேற்பட்டோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவிக்கின்றார்.

அநுராதபுரவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர், ஆளும் கட்சியில் தற்போது பனிப்போர் நடந்துவருவதாகவும் வெகுவிரைவில் அது பற்றியெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்து வரும் எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறுவதற்காக ஆவன செய்துள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com