Monday, May 5, 2014

பொதுபல சேனா பிணையில் விடுதலை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் 4 தேரர்கள், இன்னும் இருவர் ரூபா இரண்டு இலட்சம் வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நடந்த குறித்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தினால் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி கொழும்பு, நிப்பொன் ஹோட்டலில் ஜாத்திக பலசேனா அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவிடாமல் இடையில் அத்துமீறிப் புகுந்து, பலசேனாவின் தலைவர் வட்டரெக்க விஜித்த தேரர் உள்ளிட்டோரை அச்சுறுத்தியதுடன், புனித அல்குர்ஆனை இழிவுபடுத்திய காரணங்களுக்காக இவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com