Thursday, May 8, 2014

ஹம்பாந்தோட்டை நகரபிதாவின் “விளையாட்டுத் துப்பாக்கி” பொலிஸாரிடம்…!

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் , ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் பற்றி பரிசீலனை செய்யச் சென்ற சுற்றுலாவின்போது, தாக்குதலுக்கு உள்ளாகிய வேளை, ஹம்பாந்தோட்டை நகரபிதா பயன்படுத்திய “விளையாட்டுத் துப்பாக்கி” பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

“விளையாட்டுத் துப்பாக்கி”யை பொலிஸாரிடம் கையளித்துவிட்டு, வாக்குமூலமொன்றும் அளித்ததாக ஹம்பாந்தோட்டை நகரபிதா எராஜ் பிரனாந்து குறிப்பிடுகிறார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினர் நேற்று தன்னிடம் தகவல்களைப் பெற்றுப் பதிந்துகொண்டதாகவும், ஹம்பாந்தோட்டையில் நடந்த இந்த நாடகம் தொடர்பிலான சகல விடயங்களையும் தான் தெளிவுறுத்தியதாகவும் ஹம்பாந்தோட்டை நகரபிதா குறிப்பிடுகிறார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com