Thursday, May 29, 2014

கலாகா நூல்கந்த தோட்டத்தில் புலியின் நடமாட்டம் - க.கிஷாந்தன் (படங்கள்)

கலாகா நூல்கந்த தோட்டத்தில் புலியின் நடமாட்டம் இருப்பதாக தெரியவருகின்றது. மேற்படி புலி அடிக்கடி மாலை வேளையில் காட்டுப்பகுதியிலிருந்து தேயிலை தோட்டங்களுக்கு வருகைதந்து செல்வதாகவும் தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தொழிலாளிகளுக்கு பாதிப்பு இல்லையெனவும் தெரிவிக்கின்றனர். மிருகங்களை வேட்டையாடும் நபர்களினால் இப் புலிக்கு ஆபத்து இருப்பதாகவும் தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மேற்படி புலி 8 அடி உயரம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. குறித்த புலி நூல்கந்த தோட்டத்தில் நடமாடும் வேளையில் எமது செய்தியாளர் கெமராவில் பதிவான படங்களை இங்கு காணலாம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com