Tuesday, May 6, 2014

விமலின் கட்சி பற்றிய இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதியே எடுப்பார்!

நேற்று இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டாவது தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் இறுதி முடிவு எடுப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குரிய பணியாகும் என உபதலைவர் அமைச்சர் நிமல் சிரிபால த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே அதுதொடர்பில் இறுதி முடிவினை எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையின் கீழ் இயங்கும் தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டாவது மாநாட்டில், அக்கட்சி அரசாங்கத்தினுள் தொடர்ந்து நிற்க வேண்டுமாயின் அரசாங்கத்தினால் அவசரமாகச் செய்ய வேண்டிய மீள்பரிசீலனைப் பிரேரணைகள் 12 ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com