Monday, May 5, 2014

ஹோட்டலில் ஈக்களில்லாத இரகசியம் அம்பலம்...!!!!

பண்டாரகம நகரின் ஹோட்டல் ஒன்றில் உணவுகளை மூடிவைக்கும் அலுமாரியில் ஈக்கள் மற்றும் எறும்புகளை ஒழிப்பதற்காக கிருமிநாசினி தெளித்ததாக கூறப்படுகின்ற சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் கூறுகின்றது.

பேக்கரிப் பொருட்களை அங்கு வைப்பதற்கு முன்னர் கிருமிநாசினி (பூச்சிக் கொல்லி) மருந்து தெளித்திருப்பது அதனுள்ளிருந்து வந்த நாற்றத்தின் மூலம் தெரியவந்த்தாகவும், அதன்பின்னர் அதனை மக்கள் சுகாதார பரிசோகருக்கு அறிவித்துள்ளனர்.

ஹோட்டலிலுள்ள அனைத்துப் பொருட்களையும் வெளியே வீசுமாறு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆணையிட்டுள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com