Wednesday, May 21, 2014

யாழில் வாள் வெட்டு ; இரு இளைஞர்கள் படுகாயம்........

யாழ். பூநாறி மரத்தடியில் இரு இளைஞர்கள் மீது வாள் மற்றும் கை கோடரியினால் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் உள்ள பூநாறி மர பிரதேசத்தில் நேற்று (20) மாலை 6.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் கொக்குவில் பிரதேசத்தை சேர்ந்த திலீப் (வயது 26) செந்தீஷன் (வயது 24) என்னும் இரு இளைஞர்களே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கொக்குவில் மஞ்சவன பகுதியில் இருந்து 6 மோட்டார் சைக்கிளில் வந்த 10 நபர்கள் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த இருவரையும் தாக்க முற்பட்டுள்ளனர். அத் தாக்குதலில் இருந்து தப்பி காங்கேசன் துறை வீதியின் ஊடாக முச்சக்கர வண்டியில் ஓடியவர்களை சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு கலைத்து வந்து பூநாறி மரத்தடியில் மீண்டும் இடைமறித்து முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் மீது வாள் மற்றும் கைக்கோடாரிகளால் சரமாரியாக வெட்டியுள்ளார்கள்.

இத்தாக்குதலை மேற்கொண்ட குழுவில் மூவர் கைகோடாரிகளை வைத்திருந்ததாகவும் ஒருவர் வாள் வைத்திருந்ததாகவும் இச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com