Thursday, May 1, 2014

பஸ் கட்டண அதிகரிப்பு இன்றேல் ஆர்ப்பாட்டம் செய்வோம்! - அஞ்சன பிரியங்க

கட்டாயம் 20 வீத பஸ் கட்டண அதிகரிப்புத் தேவை எனவும், ஆக்க் குறைந்த கட்டணம் ரூபா 10 ஆக இருக்க வேண்டும் எனவும் அகில இலங்கை பஸ் சங்கச் சம்மேளத்தின் செயலாளர் அஞ்சன பிரியங்க தெரிவித்து இருக்கின்றார்.

சென்ற காலங்களில் டீசலின் விலை அதிகரிக்காது இருந்தபோதும், பஸ் கட்டண சீர்திருத்தத்தின் போது, கவனத்திற் கொள்கின்ற 12 விடயங்களில் 11 விடயங்கள் கட்டண அதிகரிப்பினைக் காட்டுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் காலங்களில் கட்டண மறுசீரமைப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தையின் போது, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை கருத்திற் கொண்டு 20 வீத அதிகரிப்பினை மேற்கொள்வதற்கு முடிவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாதவிடத்து ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் பஸ் போக்குவரத்து ஆர்ப்பாட்டம் நடாத்தப்படும் எனவும் அவர் தெளிவுறுத்தி இருக்கின்றார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com