Monday, May 5, 2014

பிரசவித்த சிசுவை கொலை செய்து அலுமாரியில் பதுக்கி வைத்த தாய் கைது !!

ஆண் சிசு ஒன்றை கொலை செய்து சடலத்தை அலுமாரி யொன்றில் பதுக்கி வைத்த தாயொருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நோய்வாய்ப்பட்டிருப்பதனால் அவரை பொலிஸ்பாதுகாப்புடன் வெலிமடை அரசினர் மருத்து வமனையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்து ள்ளனர். வெலிமடை தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு பிள்ளைகளுக்கு தாயான இப் பெண், கணவனிடமிருந்து பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஆண் சிசுவொன்றை பிரசவித்து அச்சிசுவை கொலை செய்து அலுமாரியொன்றில் பதுக்கி வைத்துள்ளார். இது தொடர்பில் குடும்ப நல தாதியொருவருக்கு தெரியவந்ததையடுத்து அத் தாதி குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று அவ்வீட்டிலிருந்த பெண்ணை சோதனையிட்ட போது சிசு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் குறித்து வெலிமடை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் சுகதேகியாக பிரசவமான சிசுவை அத்தாயே கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெலிமடை பொலிஸார் சிசுவைக் கொலை செய்த தாயை கைது செய்தனர். அவரை பொலிஸ் பாதுகாப்புடன் வெலிமடை அரசினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com