Monday, May 5, 2014

7 வயது சிறுமியை நாசம் செய்த 18 வயது வாலிபன்! - சேனைகுடிப்பில் சம்பவம்!

18 வயது இளைஞன் ஒருவனால் 7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ளதுடன் தலைமறைவாகியிருந்த குறித்த இளைஞனை கைதுசெய்தபொலிஸார் அவனை நீதிமன்றில் ஆஜர்படுதர்தியபோது எதிர்வரும் 16 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கடந்த மாதம் 27 ஆம் திகதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பாரின் வழிகாட்டலில் பெருங் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மேற்படி சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை சேனைகுடியிருப்பு கிராமத்தில் வைத்து கைதுசெய்யப்படடார்.

குறித்த சிறுமி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com