ஈபே இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டது 233 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கடவுச்சொல்லை மாற்ற கோரிக்கை !!
233 மில்லியன் பயனர்களைக கொண்டுள்ள இணையத்தள சந்தையின் முன்னணி நாமமான ஈபே இணையத்தளத்தின் பயனர்கள் தரவுகள் மிகப் பெரியளவில் ஹெக் செய்யப் பட்டுள்ளது. மிகப்பெரும் சைபர் தாக்குதலாகக் கருதப்படும் இந்த தகவல் திருட்டினையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது கடவுச்சொல்லை மாற்றுமாறு ஈபே நிறுவனம் கேட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் சுய தரவுகள் மீது இரு வாரங்களுக்கு முன்னர் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும் வணிகத் தகவல்களை ஹெக்கர்களால் நெருங்க முடியவில்லை என ஈபே நிறுவனம் கூறியுள்ளது.
0 comments :
Post a Comment