Thursday, May 15, 2014

மிலானோவில் இராணுவத்தினரை நினைவு கூரும் நிகழ்வு மே 18 இல்!

இராணுவத்தினர் வெற்றி வாகை சூடியதை நினைவுகூரும் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப. 3 மணிக்கு மிலானோ நகரில் சென். அந்தோனி வீதியில் உள்ள 5 ஆம் இலக்க இடத்தில் நடைபெறவுள்ளது.

“அபீத ரணவிருவன்ட புதமு பிரணாம” எனும் தலைப்பிலான இந்நிகழ்விற்கு புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பிரனாந்து, குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சந்யா ராஜபக்ஷ, இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதுவர் நாவலகே பெனட் குரே, மற்றும் முன்னாள் வவுனியா கட்டளைத் தளபதி ஜெனரல் ஜகத் டயஸ் ஆகியோர் விசேட அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com