Friday, May 30, 2014

வவுனியா வந்த பெண்ணிடம் 14 லட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு !!

மட்டக்களப்பில் இருந்து தனியாக பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம் 14 லட்சம். பெறுமதியான நகைகள் களவாடப் பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது வவுனியா கோவில்குளத்தை சேர்ந்த பெண் மட்டகளப்பில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு வவுனியாவை நோக்கி பஸ்ஸில் சென்று கொண்டிருந்த வேளையில் அவரது கைப்பையில் உள்ள 14 லட்சம் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டதென வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com