Wednesday, May 21, 2014

வவுனியாவில் 14 வயது சிறுமி 5 மாத கர்ப்பிணியான துயரம்.....

வவுனியா, கிடாச்சூரி வீதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றினைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 5 மாத கர்ப்பிணியாக்கி சிறுமியின் உறவினராகிய 23 வயது இளைஞனை வவுனியா பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த சிறுமியின் அக்காவின் கணவராகிய 23 வயது இளைஞன் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதன் காரணமாக குறித்த சிறுமி 5 மாத கர்ப்பிணி யாகியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து இளைஞன் தலைமறைவாகி யுள்ளதாகவும், பொலிஸார் அவரைத் தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com