Thursday, April 17, 2014

UNP உறுப்பினர் சேனக்க தமயந்த யுவதியின் மார்பகத்தால் தூக்கி சரமாரியாகத் தாக்கினார்!

மெரட்டுமுல்லவில் சம்பவம்!

ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர் சேனக்க தமயந்த மற்றும் அக்கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஒருவரும், யுவதியொருவரின் மார்பகத்தால் தூக்கி, சுவரில் சாய்த்துத் சரமாரியாகத் தாக்கியதாக மொரட்டுவ பொலிஸில் மூன்று முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

மொரட்டுமுல்லே வீடொன்றிலேயே இது இடம்பெற்றுள்ளதுடன் தாயும், மகள்மார் இருவரும், ஒரு மகளின் காதலனும் வீட்டில் இருக்கும்போதே, அவர்களது வீட்டுக்குச் சென்று அவர்களைத் தாக்கியதாக முறைப்பாட்டில் எழுதப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளாகியுள்ள காதலன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாகாண சபை உறுப்பினர் சேனக்க தமயந்த உள்ளிட்டோர் பொலிஸிற்குச் சென்று, பின்னர் நீதிமன்றில் ஆஜராகி சரீரப் பிணையில் விடுதலையாகியுள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com