Friday, April 11, 2014

துப்பாக்கியால் ஒருவரை சுட்டு விட்டு தன்னையே சுட்டுக் கொண்டவர் மரணம் ; அவரால் சுடப்பட்டவர் காயம் !

இரத்தினபுரி கரங்கொட, ஹங்கமுவ பிரதேசத்தில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தன்னைத் தானே துப்பாகியால் சுட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக் கின்றது. ஹன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான சுனில் ஜயசிங்ஹ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந் தவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது இரத் தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப்பரிசோதனை நேற்று இடம் பெறவிருந்தது. மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com