Thursday, April 10, 2014

மிருகங்கள் இருக்க வேண்டிய பிரதேசத்தில் மிருகங்கள்தான் இருக்கவேண்டும்! மனிதர்கள் இருக்கலாகாது - ஞானசார தேரர்

மிருகங்கள் இருக்க வேண்டிய பிரதேசத்தில் மனிதர்கள் இருக்கலாகாது என்று வில்பத்து சரணாலயப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வில்பத்து சரணாலயத்தின் வடக்கு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இந்த வீடுகளை நிர்மாணிக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதியுதவி வழங்குவதாகவும் முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த சரணாலத்தின் வடக்கு பிரதேச காணிகளை பலவந்தமாக பிடித்து, அங்குள்ள காடுகளை அழித்து வருவதாகக் கூறி, பொது பல சேனா அமைப்பினர் குறித்த பிரதேசத்தைப் பார்வையிடச் சென்றுள்ளனர். அவ்வமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட பலர், செவ்வாயன்று, மேற்படி பிரதேசத்துக்குச் சென்று அங்குள்ள பொதுமக்களைப் பார்வையிட்டதுடன், மிருகங்கள் இருக்க வேண்டிய பிரதேசத்தில் மனிதர்கள் இருக்கலாகாது என குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com