Thursday, April 17, 2014

ஞானசாரரக்கு பிஸ்ரோல் வேண்டுமாம்! பாதுகாப்பு அமைச்சுக்கு விண்ணப்பம்!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி மற்றும் தோட்டக்களை வழங்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

தனது உயிர் பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி ஒன்றையும் 50 தோட்டக்களையும் வழங்குமாறு அவர் தனது விண்ணப்பத்தில் கேட்டுள்ளார்.

பௌத்த சாசனத்தை பாதுகாக்கவும் அதனை நிலைபெற செய்யும் நோக்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் தனக்கு அந்நிய மதங்கள் மற்றும் அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலரால் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் சில சந்தர்ப்பங்களில் தன்னை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

இதனால் தனக்கு கைத்துப்பாக்கியும் அதற்கான 50 தோட்டக்களும் வழங்குமாறு அவர் கேட்டுள்ளார்.

அதேவேளை ஞானசார தேரரின் கோரிக்கை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com