Thursday, April 10, 2014

ஞானசாரருக்கு பொலிஸிற்கு வருமாறு அழைப்பு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 12ம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு கொம்பனித்தெரு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்று கொழும்பு - நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பில் வாக்குமூலம் பெறவே ஞானசார தேரர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜாதிக பலசேனா அமைப்பு நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடத்திற்கு சென்ற ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் அங்கு பதற்ற நிலை தோற்றுவித்ததுடன் தேரர் ஒருவரையும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

விஜித தேரருடன் இணைந்து முஸ்லிம் பிரதிநிதிகள் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com