Monday, April 7, 2014

மாகாண சபை அமைச்சர்களோ, பணியாளர்களோ வெளிநாட்டுப் பயணம் செல்லமுடியாது! - ஜனாதிபதி

எதிர்வரும் காலங்களில் மாகாண சபைப் பணத்தைக் கரைத்து, மாகாண சபையின் அமைச்சர்களும், பணியாளர்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தடைசெய்துள்ளார்.

இதுதொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தின் மூலமாக அனைத்து மாகாண சபைகளுக்கும் அறிவித்துள்ளார்.

அதற்கேற்ப, வெளிநாட்டுச் செயற்றிட்டங்களின் மூலம் கிடைக்கும் உதவியைக் கொண்டோ, மாகாண சபைகளுக்குக் கிடைக்கும் பணத்தை விரயம் செய்தோ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வது சபையின் அமைச்சர்களுக்கும், பணியாளர்களுக்கும் முற்றிலும் தடை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, தங்களது பணத்தைச் செலவுசெய்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு எவ்வித்த் தடையுமில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com