Thursday, April 10, 2014

பொலிஸார் என கூறி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல்! வவுனியாவில் சம்பவம்!

தாம் பொலிஸார் எனவும் வீட்டினுள் சோதனை நடத்த வேண்டும என கூறிக்கொண்டு இரவு 9.10 அளவில் வவுனியாவில் உள்ள வீடொன்றிற்கு சென்ற நால்வர், அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த சுமார் 6 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றதாகவும் வந்தவர்கள் கைத்துப்பாக்கி போன்று ஒன்றை வைத்திருந்தாகவும் வீட்டு உரிமையாளர்கள் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com