Saturday, April 12, 2014

ஞானசாரரின் அடாவடித்தனத்தின் பின்புலத்தில் அதிகாரவர்க்கம் நிற்கின்றது! - ரவூப் ஹக்கீம்

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசாரர் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம், ஜாதிக்க பல சேனா அமைப்பினர் ஒழுங்குசெய்திருந்த ஊடகச் சந்திப்பை சீர்குலைத்தமைக்கு ஏதேனும் ஓர் அதிகார வர்க்கத்தினரின் உதவி கிடைத்திருக்கின்றது என்று சொல்வதற்குக் காரணம் அங்கு பொலிஸார் நடந்துகொண்ட முறையே என முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற அமைச்சர் ரவூப் குறிப்பிடுகிறார்.

அண்மைக் காலமாக நடந்துவருகின்ற இவ்வாறான விடயங்களை எடுத்துநோக்கும்போது, இந்நாட்டு சிறுபான்மை மதக் குழுக்களுக்கு எதிராக சில பௌத்த மதகுருமார் தம் மார்க்கத்திற்கு இழிவு உண்டுபண்ணும் வகையில் நடந்துகொள்கின்றமை கோடிட்டுக் காட்ட வேண்டியதொரு விடயமாகும் என அவர் குறிப்பிடுகிறார்.

குறித்த குழுவினர் நடந்துகொண்ட முறைபற்றி முழு நாடும் தற்போது தெரிந்துகொண்டுள்ளது. அதுமட்டுமன்றி குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தை சரிவர நிறைவேற்ற வேண்டியவர்கள் நடந்துகொண்ட முறைபற்றியும், அந்நிகழ்வு நடைபெறும்வேளை கொம்பனித் தெரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பொலிஸார் இதனை சாதாரண விடயமாக எடுத்துக்கொண்டதும், புதுமையாக இருக்கிறது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com