Wednesday, April 30, 2014

குருநாகல் பொத்துஹெரவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!! 75 பேர் படுகாயம் - (படங்கள் )

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் விபத்தில் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிட மாகவுள்ளதாக குருநாகல் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயில் பொத்துஹெர ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி சென்ற அதிவேக ரயில் மோதியுள்ளது. இந்த விபத்து இன்று (30) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது ரயில் பெட்டிகள் 20 அடிவரையில் வீசப்பட்டுள்ளன.

இந்த விபத்தின் காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com