Thursday, April 24, 2014

73 குடும்பங்களுக்கும் 40 ஏக்கர் காணி தந்தால் வில்பத்திலிருந்து வெளியேறுவோம்!

வில்பத்து சரணாலயத்தில் குறித்ததொரு பகுதியினர் பலவந்தமாக குடியேறிவருவதாக பல்வேறு அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதாகவும், அதனைத் தான் நிராகரிப்பதாகவும், இவ்விடயம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்புக்கு மாத்திரம் தான் தலைசாய்க்கவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் பதுர்தீன் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு குடியேறியுள்ள 73 குடும்பங்களுக்கும் 40 ஏக்கர் காணியைப் பெற்றுத்தரின், அப்பிரதேசத்திலிருந்து மக்கள் இடம்பெயர்வதற்குத் தயாராக இருப்பதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

சரணாலயத்தை துப்புரவு செய்து சூழலுக்கு அநியாயம் செய்து, ஒரு பகுதியினர் குடியேறியுள்ளதாக பொதுபல சேனா மற்றும் சூழலியல் அமைப்புக்கள் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com